சமூக வலைதளங்களில் பரவிய ஒரு காணொளி தொடர்பாக பாகிஸ்தானிய இஸ்லாமிய அறிஞர் மௌலானா தாரிக் மசூத் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். குடும்ப உறவுகள் மற்றும் திருமண வாழ்க்கை தொடர்பாக அவர் கூறியதாகக் கூறப்படும் கருத்துகள் இணையத்தில் வெளியாகியதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன.
இணையத்தில் பரவி வரும் அந்த காணொளியில், மகளுடன் உடலுறவு கொள்தல் பற்றி பேசியுள்ளார். குடும்ப உறவுகள் குறித்து அவர் கொச்சையாக பேசியது மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்த்ள்ளனர். இதனால், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், சிலர் அந்த காணொளி முழுமையான உரையாடல் இல்லாமல், சில பகுதிகள் மட்டும் பகிரப்பட்டதாக கூறியுள்ளனர்.
யார் இந்த மௌலானா? மௌலானா தாரிக் மசூத், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பெரும் பின்தொடர்பாளர்களை கொண்ட பிரபல மதப் பேச்சாளராக அறியப்படுகிறார். சமூக, மத மற்றும் குடும்ப விவகாரங்கள் குறித்து அவர் தொடர்ந்து உரையாற்றி வரும் நிலையில், இந்த சர்ச்சை அவரது கருத்துகளின் பொருள் மற்றும் விளக்கம் குறித்து தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் பலரும், பொது மேடைகளில் பேசும் மதத் தலைவர்கள் அதிக பொறுப்புடன் நடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதே சமயம், சிலர் முழு உரையை பார்க்காமல் துண்டிக்கப்பட்ட வீடியோவை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை பாகிஸ்தான் அரசாங்கம் அல்லது அதிகாரிகள் தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ நடவடிக்கையும் அறிவிக்கப்படவில்லை. எனினும், இணையத்தில் இந்த விவாதம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
Read more: உதயநிதிக்கு சட்டப்பேரவையிலே பதிலடி கொடுத்திருக்கனும்.. ஆனால் விஜய் தடுத்துவிட்டார்..! – ஆதவ் அர்ஜூனா



