தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; ஆனால், அந்த விழாவில் த்ரிஷா கலந்துகொண்டது அதைவிடப் பெரிய பேசுபொருளாக மாறியது. விஜய்யின் மனைவி மற்றும் குழந்தைகள் கூட அந்த விழாவிற்கு வராத நிலையில், விஜய்யின் காதலி என்று கூறப்படும் த்ரிஷா, விழாவின் முதல் வரிசையில் அமர்ந்து விஜய்யின் வெற்றியைப் பெருமையுடன் கண்டு ரசித்தார். இதன் விளைவாக, த்ரிஷாவைப் பற்றிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் அதிகமாக வரத்தொடங்கி உள்ளன..
உண்மையில், த்ரிஷாவுக்கும் விஜய்க்கும் இடையே ஒரு ரகசிய உறவு இருப்பதாக நீண்ட காலமாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. விஜய் த்ரிஷாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும், இருவரும் காதலித்து வருவதாகவும் பலவிதமான கிசுகிசுக்கள் பரவி வந்தன.
மேலும் விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்யவிருப்பதாகத் தகவல்கள் கசிந்தன; மேலும், தேர்தலில் விஜய்யின் வெற்றியை த்ரிஷா கொண்டாடியது… எனப் பல நிகழ்வுகள் அரங்கேறிய நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ளத் தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் விஜய்யோ அல்லது த்ரிஷாவோ இதுகுறித்து இதுவரை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. தங்களைப் பற்றிப் பரவும் வதந்திகள் பொய்யானவை என்று கூட அவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதன் மூலம், இருவரும் ஒரு உறவில் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே கருதப்படுகிறது.
மறுபுறம், விஜய்யின் மனைவி சங்கீதாவும் தனது விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் அவருக்கு ஏப்ரல் 2021-இல் தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் சங்கீதா தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து விஜய்யும் த்ரிஷாவும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது, விஜய்யின் இரண்டாவது திருமணம் குறித்த செய்திகள் விரைவில் வெளியாகும் என்று அனைவரும் கருதுகின்றனர். அப்படியென்றால், இந்தத் திருமணத்திற்கு விஜய்யின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துவிட்டார்களா? சங்கீதா ஸ்வர்ணலிங்கத்தை விவாகரத்து செய்துவிட்டு, திரிஷாவை விஜய் திருமணம் செய்துகொள்வதை அவரது குடும்பத்தினர் விரும்புகிறார்களா? குடும்பப் பெரியவர்களின் கருத்து என்ன? என்பது குறித்த விவாதங்கள் தற்போது வேறு ஒரு கோணத்தில் நடைபெற்று வருகின்றன.
எது எப்படியோ, விஜய் பதவியேற்ற நாளில் ஒரு முக்கியத் துப்பு (clue) கிடைத்திருப்பதாகவே சொல்ல வேண்டும். அந்த விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்களைப் பெயர் சொல்லி அழைத்து, மிகுந்த உற்சாகத்துடன் த்ரிஷா வரவேற்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, விஜய்யின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் அந்தப் பக்கம் வருவதைக் கண்ட திரிஷா, தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து நின்று, புன்னகையுடன் அவர்களை வரவேற்று, பாசத்துடன் முத்தமிட்டார். இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. இதைக் கண்ட மக்கள், விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையிலான திருமணத்திற்கு அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துவிட்டதாகப் பேசிக்கொள்கின்றனர்.
எனவே, இந்த அனுமானத்தின் அடிப்படையில் பார்க்கையில், விஜய்-திரிஷா திருமணம் குறித்த செய்தியும் விரைவில் வெளியாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இருப்பினும், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ள தளபதி விஜய், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசுபொருளாகியுள்ளார்.
வெள்ளித்திரையில் த்ரிஷா -விஜய் கூட்டணி பெரிய அளவில் எந்தவொரு ‘ஜாலத்தையும்’ நிகழ்த்திக் காட்டவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்த ஜோடி இதுவரை மொத்தம் 5 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ‘கில்லி’ ஆகும். மகேஷ் பாபுவின் பிரம்மாண்ட வெற்றிப்படமான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம், தமிழகத் திரையுலகின் பல சாதனைகளை முறியடித்தது.
இப்படத்திற்குப் பிறகு, த்ரிஷாவும் விஜய்யும் திரையில் மிகச்சிறந்த ஜோடியாக வலம் வந்தனர். அதன்பின்னர், ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ போன்ற படங்களில் நடித்தனர்.. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் – த்ரிஷா ஜோடி ‘லியோ’ படத்தில் இணைந்து நடித்தனர்.. விஜய் இரட்டை வேடத்தில் நடித்த ‘GOAT’ திரைப்படத்திலும், த்ரிஷா ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : ” நடிகர் அஜித்திற்கும் முதலமைச்சராகும் யோகம் இருக்கு.. ஆனால்..” விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் பரபரப்பு பேட்டி..!



