சென்னையின் நிர்வாகக் கட்டமைப்பில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.1,200 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்காக 26.5 ஏக்கர் வரை நிலத்தை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டத்துக்கான முதற்கட்ட நிர்வாக அனுமதியை விரைவில் வழங்க அரசு தயாராகி வருகிறது. புதிய வளாகத்தின் முக்கிய கட்டிடம் 15 மாடிகளுடன் சுமார் 20 லட்சம் […]

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர். இத்துடன் முதல்வர் விஜய் 2 […]

3 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அப்போது காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். முதல்வர் பேச ஆரம்பித்தது முதலே எதிர்க்கட்சிகள் இருக்கையில் எழுந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டது. இருப்பினும் முதல்வர் ஆக்ரோசத்துடன் திமுகவை தாக்கி முதல்வர் பேசினார். அவர், பேசியதாவது, பேச்சுரிமை என்பது பெண்களைத் தரம் தாழ்த்திப் பேசுவதற்கோ அல்லது இரட்டை அர்த்தத்தில் பேசுவதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது […]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், மாநில முதலமைச்சருமான விஜய்யின் அரசியல் நகர்வுகள் தற்போது டெல்லி வரை எதிரொலித்து, காங்கிரஸ் கூட்டணியை உலுக்கி வருகின்றன. 2029 நாடாளுமன்றத் தேர்தலை முதன்மை இலக்காக கொண்டு, உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய வடமாநிலங்களிலும் தவெகவின் கொடியை நட்ட விஜய் திட்டமிட்டு வருகிறார். அண்மையில் வெளியான தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில், பிரதமராக யாருக்கு ஆதரவு என்ற பட்டியலில் 9.2% வாக்குகள் பெற்று விஜய் […]

காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்க முதல்வர் நன்றாக தயாராகி வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு நான் தயாராக இருக்கிறேன் ஆனால், நீங்க யாரும் ஓடிவிடக்கூடாது என்று முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மிதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் […]

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி, அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. தற்போது கேரள மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகக் கூடுதல் பொறுப்புகளைக் கவனித்து வரும் சூழலில், விரைவில் முழுநேர ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், ஆந்திர […]

முதல்வர் விஜய்க்கு மாநில மக்கள் ஒரு மிகப்பெரிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், அந்த வாய்ப்பை அவரும் அவரது கட்சியும் மக்கள் நலனுக்காக முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் அனுபவத்திற்கும் தலைமைப் பண்பிற்கும் இணையாக தற்போதைய சூழலில் வேறு யாரையும் சிந்தித்துக்கூட பார்க்க இயலாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய […]

இளம் தலைமுறையினர் தங்களது அன்றாட வாழ்க்கையில் விளையாட்டையும் உடற்பயிற்சியையும் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இந்திய ஹாக்கி உலகின் ஈடு இணையற்ற சாதனையாளரான மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விளையாட்டு என்பது போட்டிகளில் […]

சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். போட்டியின் தொடக்கத்தில் கார்வானா ஆதிக்கம் செலுத்தி ஆறு புள்ளிகள் முன்னிலையில் இருந்ததால் பிரக்ஞானந்தா கடுமையான பின்னடைவைச் சந்தித்திருந்தார். இருப்பினும், இறுதி […]

நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தை தொடர்ந்து பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி ஆற்றில் உருவான கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. ஆற்றின் கரையோரத்தில் இருந்த குடியிருப்புகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். இதில் மாயமானவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் […]