சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறது.. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர்களில் ரஜினியும் ஒருவர்.. தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை அவர் கொண்டுள்ளார்.. அவர் எங்கு சென்றாலும் கூட்டம் அலைமோதும். ஆனால், பெங்களூருவில் உள்ள ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச மையத்திற்குச் சென்றபோது, தன்னை யாரும் கண்டுகொள்ளவே இல்லை என்று அடார் சமீபத்தில் ஒப்புக்கொண்டார்.
புகைப்படங்கள் மற்றும் ஆட்டோகிராஃப்களுக்காக மக்கள் தன்னை அணுகுவார்கள் என்று எதிர்பார்த்த போதிலும், ஒருவர்கூட தன்னை ஏறெடுத்துப் பார்க்கவில்லை என்றும், இந்த அனுபவம் தனது கர்வத்திற்கு ஒரு உண்மையான அடியாக அமைந்தது என்றும் அவர் கூறினார்.
செவ்வாயன்று, ‘கூலி’ நடிகர் ரஜினிகாந்த், ஆர்ட் ஆஃப் லிவிங் அறக்கட்டளையின் 45-வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், பெங்களூருவில் உள்ள ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச மையத்திற்குச் சென்றபோது தனது கர்வம் நொறுக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.
ரஜினி இதுகுறித்து பேசிய போது “குருதேவ் என்னையும் தன்னுடன் வருமாறு கேட்டார். அது அவருக்குப் பெரும் தொந்தரவை ஏற்படுத்தும் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர், ‘பிரச்சனையில்லை, தொந்தரவு இல்லை, வாருங்கள்’ என்றார்… இயல்பாகவே மக்கள் அங்கே இருப்பார்கள், என்னை அடையாளம் கண்டுகொள்வார்கள், என் பெயரைச் சொல்லி அழைப்பார்கள், புகைப்படம் கேட்பார்கள் என்றெல்லாம் நான் நினைத்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரையும் நான் பார்த்தேன்.
ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே இருந்தனர். வெளிப்படையாகச் சொல்லப்போனால், ஒருவர்கூட என்னைப் பார்க்கவில்லை… புகைப்படங்கள் மற்றும் ஆட்டோகிராஃப்களை விடுங்கள்; ஒருவர்கூட என்னைப் பார்க்கவோ பேசவோ இல்லை. நான் கையசைத்தேன், ஆனால் யாரும் என்னைப் பார்க்கவில்லை… நான் பல அரசியல்வாதிகளையும் தொழிலதிபர்களையும் சந்தித்திருக்கிறேன், ஆனால் இந்தச் சம்பவம் என் அகந்தையை நொறுக்கிவிட்டது” என்று கூறினார்.
அந்தப் பயணத்தின்போது “எந்தத் தொந்தரவும் இருக்காது” என்று ரவிசங்கர் தனக்கு உறுதியளித்ததாக ரஜினி கூறினார். பின்னர் அந்தத் தருணத்தைப் பற்றிச் சிரித்துக்கொண்டே, ரஜினிகாந்த் தன் தலையைச் சுட்டிக்காட்டி, “இங்கே எனக்குத் தொந்தரவு ஏற்பட்டுவிட்டது” என்று நகைச்சுவையாகக் கூறினார். அந்த அனுபவம் “ஆன்மீகத்தின் சக்தியை” தனக்கு உண்மையாகப் புரிய வைத்ததாக அவர் மேலும் கூறினார்.
ரஜினிகாந்தின் பணி நிலவரம்
ரஜினிகாந்த் கடைசியாக நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து ‘கூலி’ என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்திருந்தார். அடுத்து அவர் நெல்சன் திலிப்குமார் இயக்கும் ‘ஜெய்லர் 2’ படத்தில் நடிக்கிறார். இது 2023-ல் வெளியான வெற்றிப் படமான ‘ஜெய்லர்’ படத்தின் இரண்டாம் பாகமாகும்.



