டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் அமைந்துள்ள ‘லெமன் கிரீன்’ (Lemon Green) உணவகத்தின் அடித்தளத்தில் இன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.. இந்தத் தீ விபத்து உணவகத்தின் அடித்தளத்தில்தான் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.. காலை சுமார் 9:45 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தில்லி தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது..
இதைத் தொடர்ந்து, பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன. கட்டிடத்திற்குள் பலர் சிக்கிக்கொண்டிருக்கலாம் என அஞ்சப்பட்டதால், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
11 பேர் மீட்பு; 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
இதுவரை, டெல்லி தீயணைப்புத் துறையினர் அந்தக் கட்டிடத்திலிருந்து 11 பேரை மீட்டுள்ளனர். அவர்களில், அடித்தளத்தில் சிக்கிக்கொண்டிருந்த மூன்று நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ‘CATS’ ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர். மீட்கப்பட்டவர்களின் உடல்நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தீயை அணைக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான மீட்பு மற்றும் அணைப்புப் பணி தொடங்கப்பட்டது; இதற்காகச் சம்பவ இடத்தில் 10 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



