ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சபர்மதி – ஆக்ரா அதிவிரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.
ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள மதார் ரயில் நிலையம் அருகே சூப்பர் பாஸ்ட் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இச்சம்பவம் குறித்து வடமேற்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ சசி கிரண் கூறுகையில், “சபர்மதியில் இருந்து ஆக்ரா நோக்கிச் சென்ற ரயில் இன்று அஜ்மீரின் மதார் ஹோம் சிக்னல் அருகே தடம் புரண்டது. நான்கு ஜெனரல் பெட்டிகளும் ரயிலின் இன்ஜினும் தடம் புரண்டன.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், சிறிய காயங்களுக்கு உள்ளானவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவத்தின் போது பல பயணிகள் ரயிலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.