ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கணுமா..? முகவரி மாற்ற வேண்டுமா..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

ration 2025

தமிழகத்தில் மாதந்தோறும் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மக்கள் குறைதீர் முகாம்கள் நடைபெறுவது வழக்கம்.. அந்த வகையில் சென்னையில் 19 மண்டலங்களில் ஜூன் 13-ம் தேதி பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.


அதன்படி ஜீன் 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 13.06.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும். நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : “ஒரு தலைமுறை இளைஞர்களையே போதை பழக்கத்திற்கு அடிமையாக்கிய புண்ணியவான் நீங்க தானே..” CM விஜய்க்கு Ex. சபாநாயகர் பதிலடி..!

RUPA

Next Post

கேஸ் சிலிண்டர் பயனர்கள் கவனத்திற்கு..! இந்த விஷயம் தெரியாவிட்டால், நீங்கள் பணத்தை இழக்க நேரிடும்..!

Thu Jun 11 , 2026
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான சமையல் கேஸ் சிலிண்டர் (LPG) நுகர்வோருக்கு, எரிவாயு இணைப்பைப் பெறும்போது செலுத்தப்பட்ட பாதுகாப்பு வைப்புத்தொகை (security deposit) குறித்த விழிப்புணர்வு இல்லை. கேஸ் இணைப்பை ரத்து செய்து, சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டரை (regulator) சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கும்போது, ​​ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட பாதுகாப்புத் தொகையைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளது என்பது பலருக்குத் தெரியாத ஒரு விஷயமாகும். இந்த விதிமுறை இண்டேன் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas) […]
Gas Subsidy 2025

You May Like