தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.. அப்போது மேகதாது விவகாரத்தில் உரிமை மீறல் பிரச்சனை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.. ஆனால் அப்போது அவரின் மைக் அணைக்கப்பட்டது.. அதே போல் திமுக எம்.எல்.ஏ. எ.வ வேலு பேசுவதற்கு அனுமதி கோரிய போது மைக் அணைக்கப்பட்டது. அதே போல் திருவள்ளூரில் நடந்த அமோனியா வாயுக் கசிவு குறித்து பேசவும் அனுமதி மறுக்கப்பட்டது..
தொடர்ந்து பேசிய சபாநாயகர் “ உரிமை மீறல் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்னிடம் மனு அளித்தார்கள்.. மனு பரிசீலனையில் உள்ளது.. இன்று அவை முடிவதற்குள் நேரம் தருகிறேன்.. உடனே பேச அனுமதிக்க வேண்டும் என்று யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது..” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்..
பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.. இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. அமைதியாக வெளியேறுமாறு சபாநாயகர் கூறிய போதும் கூச்சல் அதிகமாக இருந்ததால் அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்..
Read More : இந்தியாவின் 3-வது பணக்கார முதல்வர்..! CM விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..! ஷாக் ஆகாம படிங்க..!



