தமிழ்நாடு மின் துறை நிலை குறித்து மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளை அறிக்கையில் வெளியிட்டார்.. 25 ஆண்டுகள் மின் துறையின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அவர் அறிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ மின் துறையில் 2001 முதல் 20026 வரை ரூ.8,355 கோடி நஷ்டம், 2006 முதல் 2011 வரை ரூ.35,463 கோடி நஷ்டம்.
மின் துறையில் 2011 முதல் 2016 வரை ரூ.56,361 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. 2016 முதல் 2026 வரை ரூ.58,534 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மின் துறையில் 2021-ம் ஆண்டு முதல் 2026 வரை ரூ.34,447 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் மொத்த கடன் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ளது.
மின்சாரத்துறையில் புதிதாக எதுவும் செய்யவில்லை.. ஆனால், ரூ.51,000 கோடி செலவுகள் அதிகமாகி உள்ளது.. மின்சார துறையில் புதிதாக டிரான்பார்ம்ர்கள் வாங்கவில்லை, முந்தைய ஆண்டுகளில் செய்ததை தான் செய்துள்ளனர்.. புதிதாக் அஎதுவும் செய்யாமல் எப்படி செலவுகள் அதிகமானது..? கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் 343 பேரை மட்டுமே வேலைக்கு எடுத்துள்ளனர்..” என்று தெரிவித்தார்..



