விவாதத்துக்கு வந்து பாருங்க… ராகுல் காந்திக்கு JP நட்டா சவால்!

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கூறி வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி தொடர்ந்து ‘தனது நிலைபாடுகளை மாற்றிக்கொண்டே இருப்பதாகவும்’, நாடாளுமன்றத்தை முடக்குவதே அவரது நோக்கம் என்றும் நட்டா கடுமையாக விமர்சித்தார். ஆரம்பத்தில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிய ராகுல் காந்தி, அதற்கு அரசு ஒப்புக்கொண்ட பிறகு, ராமர் கோயில் அறக்கட்டளை விவகாரத்தை எழுப்பியதாகவும், அதன் பின்னர் ஜந்தர் மந்தர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தனது கோரிக்கையை மாற்றியதாகவும் நட்டா சுட்டிக்காட்டினார்.

ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் தனது நிலைப்பாட்டை தினமும் மாற்றிக் கொண்டே இருக்கிறார். விவாதங்களில் ஈடுபடுவது அவரது நோக்கமல்ல, குழப்பத்தை ஏற்படுத்துவதே அவரது நோக்கம் என்று விமர்சித்த நட்டா, அவர் நாடாளுமன்றம் இயங்குவதை விரும்பவில்லை; அதனால்தான் கடந்த 15 நாட்களாக அவையின் செயல்பாடுகளை முடக்கி வருகிறார்,” என்று கூறினார்.

மேலும், நேற்று ஜந்தர் மந்தர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், அங்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறி மக்களை அவர் தவறாக வழிநடத்தத் தொடங்கியுள்ளார். உண்மையில் அப்படி எந்தச் சம்பவமும் அங்கு நடக்கவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை,” என்று தெளிவுப்படுத்திய நட்டா, நாடாளுமன்றத்திற்கு வாருங்கள்; பதிலளிக்கத் தயார்’எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க உள்துறை அமைச்சர் தயாராக உள்ளதாக நட்டா தெரிவித்தார்.

நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் தெளிவான நிலைப்பாடு. அவை இயங்கினால், ஒவ்வொரு பிரச்சனைக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று கூறிய நட்டா, “நான் மீண்டும் ராகுல் காந்திக்கு சவால் விடுகிறேன்: அவைக்கு வாருங்கள். நாங்கள் விவாதத்திற்கு தயாராக இருக்கிறோம், உங்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும். தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்” என்றும் சவால் விடுத்தார்.

ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் “இரட்டை நிலைப்பாடு” கொண்டுள்ளதாகவும், ‘எதிர்மறை அரசியலில்’ ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டிய நட்டா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் குறித்து ராகுல் காந்திக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், காங்கிரஸின் தூண்டுதலின் பேரிலேயே அங்கு முள்வேலித் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜார்க்கண்டில் போராடும் மாணவர்களின் குரல் அவருக்குக் கேட்கவில்லையா? அங்குள்ள அரசில் காங்கிரஸும் ஒரு முக்கிய அங்கம். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் இந்த இரட்டை நிலைப்பாட்டையும், பொறுப்பற்ற எதிர்க்கட்சியாக அவர்கள் செயல்படுவதையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நட்டா, இது நாட்டின் எதிர்காலத்திற்கோ அல்லது அதன் முன்னேற்றத்திற்கோ எந்த வகையிலும் உதவாது,” என்று தெரிவித்தார்

1newsnationuser5

Next Post

'கிரீன் ஸ்மூத்தி' குடித்தால் கருவுறுதல் அதிகரிக்குமா?. உண்மையில் உதவுவது எது? நிபுணர் சொல்லும் தகவல்!.

Tue Aug 11 , 2026
இயற்கையாகவே கருவுறுதலை அதிகரிக்கும்” என்று கூறப்படும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த அறிவுரைகளுக்கு சமூக வலைத்தளங்களில் பஞ்சமே இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது நிதர்சனமான உண்மை என்றாலும், இதுபோன்ற தவறான தகவல்களால் நோயாளிகள் மருத்துவ நிபுணர்களிடம் முறையான சிகிச்சை பெறாமல் ஏமாந்து போகும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. இந்தியா ஐவிஎஃப் ஃபெர்டிலிட்டி அமைப்பின் இணை நிறுவனரும், மருத்துவ இயக்குநருமான […]
greensmoothies

You May Like