விஜய்யை தொடர்ந்து யாஷ் படத்திற்கும் அதே சிக்கல்..! ‘டாக்ஸிக்’ குறித்து வெளியான முக்கிய அப்டேட்..!

jana nayagan

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டாக்ஸிக்’. இந்த படத்தை இயக்குனர் கீதூ மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.


படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திரைப்படம் தணிக்கைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

‘டாக்ஸிக்’ படத்தை ஆய்வு செய்த தணிக்கைக் குழு, சில வன்முறை காட்சிகள் மற்றும் முதிர்ந்த பார்வையாளர்களுக்கான அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாகக் கருதி ‘ஏ’ (Adults Only) சான்றிதழை வழங்கியுள்ளது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஜூலை 23ஆம் தேதி வெளியான ஜனநாயகம் படத்திற்கு இதே போல் ‘ஏ’ சந்தித்தலை தணிக்கை குழு வழங்கியது.

‘டாக்ஸிக்’ திரைப்படம் அதன் விறுவிறுப்பான கதை, அதிரடி காட்சிகள் மற்றும் யஷின் மாறுபட்ட கதாபாத்திரம் காரணமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தணிக்கைக்குப் பிறகு திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக இருப்பதாகவும், விரைவில் அதன் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யஷ் நடித்துள்ள இந்த திரைப்படம் இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. படம் வெளியாகும் நாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

தேசிய கொடியேற்றும் முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்!. ஐகோர்ட் பதிவுத்துறை அதிரடி உத்தரவு!

Fri Aug 14 , 2026
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியேற்றும் முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முந்தையநாள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கப்பட்டது. இந்நிலையில், நாளை நடக்க உள்ள சுதந்திர […]
chennai high court

You May Like