நேபாளம் மற்றும் திபெத்தில் 460-க்கும் மேற்பட்டோர் பலியான பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ‘சின்குவா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியம் 1:13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் லோங்சாங் பகுதியில் அதிர்வுகள் உணரப்பட்டன. சீனா நிலநடுக்க வலைப்பமைப்பு மையத்தின் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் 13 கிலோமீட்டர் ஆழத்தில், 29.23 வடக்கு அட்சரேகை மற்றும் 105.22 கிழக்கு தீர்க்கரேகைப் பகுதியில் மையம்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இது ஒரு மேலோட்டமான நிலநடுக்கம் என்பதால், இதன் காரணமாக ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், திபெத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அதிக அபாயத்தைக் காரணம் காட்டி, சீன அதிகாரிகள் தற்போது மீட்பு நடவடிக்கையை நிறுத்தியுள்ளனர். “எனவே, அனைத்து மீட்புக் குழுக்களும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே காத்திருந்து, மேலதிக அறிவுறுத்தல்களுக்காகத் தயாராக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னதாக, அப்பகுதிக்குச் சென்றிருந்த அவசரகாலக் குழுக்கள் “ஒரு கிலோமீட்டர் தூரம் பின்வாங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது



