சட்டப்பேரவையில் மரணம்!. ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தனிச் செயலாளருக்கு மாரடைப்பு!. உயிரைக் காப்பாற்ற அமைச்சரின் போராட்டம் வீண்!

தெலங்கானா சட்டப்பேரவை வளாகத்தில், ஐஏஎஸ் அதிகாரி நவீன் மிட்டலின் தனிச் செயலாளர் திடீரென மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீர்ப்பாசனத் துறையின் முதன்மைச் செயலாளரான நவீன் மிட்டலிடம் தனிச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜு என்பவர், எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். அங்கு உடனிருந்த அமைச்சர் வக்கிட்டி ஸ்ரீஹரி (Vakiti Srihari), உடனடியாக நிலைமையைப் புரிந்து கொண்டு களத்தில் இறங்கினார். ராஜுவின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியாக அவருக்கு மார்பக அழுத்த முதலுதவி சிகிச்சையான சிபிஆர் (CPR) செய்தார். எனினும், ராஜுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. உடனடியாக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மாரடைப்பு காரணமாகவே ராஜு திடீரெனச் சரிந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் உயிரிழப்புச் சம்பவம் சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

You May Like