நெருக்கடிகள் பரவும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும்; உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!

pm modi brics 30kb

இன்று நடைபெற்ற 18-வது BRICS தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நாளில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். திடீரென உருவாகும் சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொள்ள நாடுகள் தங்களது அமைப்புகளையும் செயல்திறனையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இரண்டு நாள் BRICS மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இன்று நடைபெற்ற “Resilience, Innovation, Cooperation and Sustainability” என்ற தலைப்பிலான அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, உலகின் ஒரு பகுதியில் உருவாகும் நெருக்கடிகள் தற்போது மிக வேகமாக எல்லைகளைக் கடந்து மற்ற நாடுகளையும் பாதிக்கும் சூழல் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தொற்றுநோய்கள், பருவநிலை பேரழிவுகள் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகள் இதற்கு முக்கிய உதாரணங்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். எந்தவொரு நெருக்கடியும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துக்குள் மட்டும் முடங்கிவிடாது என்பதால், பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றை எதிர்கொள்ள தயாராக இருப்பதுடன், தேவைப்படும் நேரத்தில் உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

2026 ஜனவரி 1-ம் தேதி முதல் இந்தியா BRICS அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் அமைப்பின் பொதுவான நோக்கங்களை நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றுவதில் கவனம் செலுத்தியதாக பிரதமர் மோடி கூறினார். பின்னடைவை சமாளிக்கும் திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய 4 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் தலைமைப் பொறுப்பு செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் மாநாட்டில் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. தொற்றுநோய் பரவலை முன்கூட்டியே கண்டறிந்து எதிர்கொள்வதற்காக BRICS ஒருங்கிணைந்த ஆரம்ப எச்சரிக்கை அமைப்பை உருவாக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

மேலும், பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை தகவல்களை ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொருட்களின் விநியோகம் தடையின்றி நடைபெறுவதற்கான Logistics Supply Chain Cooperation Framework-க்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இளம் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில் BRICS நாடுகளில் செயல்படும் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இணைக்கும் இன்குபேட்டர் வலையமைப்புக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான புதுமை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இதனிடையே, தொழில்நுட்பம் மற்றும் முக்கியமான கனிம வளங்களை அரசியல் அல்லது பொருளாதார அழுத்தத்துக்கான கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி எச்சரித்தார். அத்தியாவசிய வளங்களுக்கான அணுகலை கட்டுப்படுத்துவது உலகளாவிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

மாநாட்டின் முக்கிய அமர்வுகள் தொடங்குவதற்கு முன்பு BRICS தலைவர்கள் ஒன்றாக அதிகாரப்பூர்வ குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்களுடன் இடம்பெற்றார்.

Also Read: கல்லூரி மாணவர்களில் 90% பேருக்கு குழந்தைப் பருவத்தில் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Saranya

Next Post

நள்ளிரவில் பயங்கர விபத்து.. 2 பேர் பலி, 12 பேர் காயம்! அடுத்தடுத்து மோதிய லாரிகள்!

Sun Sep 13 , 2026
சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். தாரி பாலம் அருகே இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலைக்குச் சென்று அங்கு வந்த 2 கார்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நவி மும்பை நேருல் பகுதியைச் சேர்ந்த ஆனந்திபாய் ராமச்சந்திர வட்கர் (50) […]
fe212f6e44006c0b033d7dff194d50ed56a0478c022dcf382bfb508f8de0826c

You May Like