வயிற்றில் அடிக்கடி சத்தம் கேட்கிறதா? பசி மட்டுமல்ல.. இதுவும் முக்கிய காரணமாக இருக்கலாம்!

2158ebbb2dbe16cd7127dcf9cb55c316bcb8666179ee8100c712504e8a194cff

நாம் சாப்பிடாமல் இருக்கும்போது வயிற்றில் இருந்து ‘குருகுரு’ என்ற சத்தம் வருவது பலருக்கும் இயல்பான அனுபவமாக இருக்கும். சில நேரங்களில் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் இதுபோன்ற சத்தம் கேட்கலாம். ஆனால், வயிற்றில் உணவு இல்லாத நேரத்தில் மட்டும் இந்த சத்தம் ஏற்படுவதில்லை. செரிமான செயல்பாடு மற்றும் குடலின் இயல்பான இயக்கங்களும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.


வயிறு மற்றும் குடல் எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் உறுப்புகள். நாம் சாப்பிடும் உணவு மற்றும் திரவங்கள் செரிமானப் பாதையில் முன்னோக்கி நகர்வதற்கு வயிறு மற்றும் குடலில் உள்ள தசைகள் சுருங்கி விரிகின்றன. இந்த இயல்பான இயக்கத்தின்போது உணவு, திரவம் மற்றும் காற்று குடலுக்குள் நகரும்போது குருகுரு போன்ற சத்தம் உருவாகிறது.

வயிறு காலியாக இருக்கும்போது இந்த சத்தம் இன்னும் தெளிவாகக் கேட்கலாம். வயிற்றுக்குள் உணவு இல்லாததால், செரிமான உறுப்புகளின் இயக்கத்தால் உருவாகும் சத்தத்தை மறைக்கும் அளவு உணவு இருக்காது. இதனால் அருகில் இருப்பவர்களுக்குக்கூட கேட்கும் அளவுக்கு சில நேரங்களில் சத்தம் அதிகமாக இருக்கலாம்.

வயிற்றில் இருக்கும் வாயுவும் இதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது அதிகமாக காற்றை விழுங்குவது, வேகமாக உணவு சாப்பிடுவது போன்றவை செரிமானப் பாதையில் காற்று சேர்வதற்கு வழிவகுக்கும். சில உணவுகளும் குடல் மற்றும் வயிற்றில் வாயுவின் அளவை அதிகரிக்கக்கூடும்.

இந்த காற்று குடலுக்குள் நகரும்போது, திரவம் மற்றும் பிற செரிமானப் பொருட்களுடன் சேர்ந்து நகர்வதால் குருகுரு அல்லது வயிறு உருளுவது போன்ற சத்தம் கேட்கும். பெரும்பாலான நேரங்களில் இது செரிமான மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கும்.

Also Read: ஐபோன் வாங்கும் பட்ஜெட்டில் கார் வாங்கலாம்.. இந்த 2 கார்களின் அம்சங்களை கேட்டா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!

Saranya

Next Post

குளியலறையை சுத்தம் செய்வதில் தகராறு.. மருமகளின் முகத்தில் ஆசிட் வீசிய மாமியார்?

Thu Sep 17 , 2026
குளியலறையை சுத்தம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு விபரீதமாக மாறிய சம்பவம் குஜராத்தின் வதோதராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருமகளின் முகத்தில் மாமியார் ஆசிட் வீசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வதோதராவில் ஒரு பெண்ணுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே குளியலறையை சுத்தம் செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான தகராறு முற்றிய நிலையில், மாமியார் ஆசிட் […]
acid throwing 1641555793

You May Like