2003ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைதான புதுச்சேரியை சேர்ந்த ரவி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு அவரு பரோல் வழங்கப்பட்டது. பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி ரவி தலைமறைவானார். பின்னர் 326 நாட்களுக்கு பிறகு அவரை மீண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் பரோல் முடிந்த பின் மீண்டும் சிறையில் சரணடையாதது தொடர்பாக அவருக்கு மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு ன்முதல் தற்போதுவரை 21 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சென்னை உய்ரநீதிமன்றத்தி மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தரமோகன் அமர்வு, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், பரோலில் தப்பி சென்றார் என்பதற்காக, முன்கூட்டியே விடுதலை செய்வதை மறுக்க முடியாது எனக்கூறி, வரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.