புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரரின் வீட்டைப் பூட்டை உடைத்துத் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் விடுத்த கோரிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் தனது சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது […]

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல் குமார் கடந்த 15-ம் தேதி சாமி தரிசனம் செய்தார்.. வழக்கமாக மதியம் 12.45 மணீக்கு சாத்தப்படு கோயில் அன்றைய தினம் அமைச்சருக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.. அமைச்சரின் தரிசனத்துக்கு பிறகே கோவில் நடை அடைக்கப்பட்டது.. மேலும் கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் கடந்த 21-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் […]

மத மாற்றம் அல்லது கலப்புத் திருமணமோ பிறப்பால் நிர்ணயிக்கப்படும் சாதியை மாற்றாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு, பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், பட்டியல் சாதியல்லாத ஒருவரை திருமணம் செய்திருந்த பின்னர், அவர் மீது நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் சாதிய அடிப்படையிலான அவமதிப்பு குறித்த புகாரை மையமாகக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனில் குமார், 2024 பிப்ரவரி 10ஆம் தேதி […]

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டதற்கான மருத்துவ ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக்கி இழப்பீடு மறுக்க முடியாது என்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் காயம் இருக்கிறதா இல்லையா என்பது பொருத்தமற்றது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிபதிகள் சேகர் பி. சராஃப் மற்றும் மஞ்சீவ் சுக்லா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, ஜனவரி 14 அன்று இந்த தீர்ப்பை வழங்கியது. […]

4,000 கோடி ரூபாய் செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இது குறித்து பெண் ஒருவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நேப்கின்களின் அதிக விலை காரணமாக ஏழை பெண்களும், நாப்கின்கள் கிடைக்காத காரணத்தால் கிராமப்புற பெண்களும், ஆரோக்கியக் குறைவான மாற்று […]

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வர இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுத்து வருவதாக மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணி எம்பிக்களின் கையெழுத்துகளை நாங்கள் சேகரித்து வருகிறோம். அவற்றை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்போம் என தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர […]