fbpx

நிலத்திற்கு அடியில் வித்தியாசமான உலகம்..!! சொகுசு வாழ்க்கை வாழும் மக்கள்! எங்கே தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் ஆகியவைகளுடன் ஒரு கிராமம் இருப்பது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கூப்பர் பேடி கிராமம் அமைந்துள்ளது. முன்னதாக, 1915 ஆம் ஆண்டில் இந்த பகுதியில் மாணிக்கக்கல் எடுப்பதற்காக பல்வேறு சுரங்கங்கள் தோண்டப்பட்டன. இதையடுத்து, தாதுக்கள் இல்லாத சுரங்கங்களை, அதில் வேலை செய்யும் மக்கள் வசிக்க பயன்படுத்தத் தொடங்கினர்.

இருப்பினும், குளிர்காலத்தில் வெப்பநிலை சீராக இருப்பதாலும், கோடைக்காலங்களில் வெப்பநிலை 45 டிகிரியை விட அதிகமாகும் என்பதாலும், வெப்பத்தை தாங்கமுடியாமல் மக்கள் அடிப்படை வசதிகளோடு வீடுகளை கட்டி சுரங்கத்திற்குளேயே வசித்து வருகின்றனர். படிப்படியாக, சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் என அனைத்தையும் சுரங்கத்திலேயே ஏற்படுத்தியுள்ளனர்.

வெளியில் பார்க்க சாதாரணமாக தெரியும் ஆனால் உள்ளே வந்தால் பிரமிக்க வைக்கும். மேலும் இந்த கிராமத்திற்கு, 25 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் இருந்து பைப் மூலம் நிலத்திற்கு அடியிலேயே நீரை கொண்டுவந்து பயன்படுத்திவருகின்றனர். இந்த கிராம மக்களின் அழகிய வாழ்க்கை முறை அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையை மூடி மறைக்க சதி நடக்கிறதா? – அன்புமணி கேள்வி

English Summary

In Australia there is a village under the ground with about 1500 houses, offices, commercial complexes, etc. It is amazing and surprising.

Next Post

மணிப்பூரில் மீண்டும் வன்முறை : CRPF வீரர் சுட்டுக்கொலை!! என்ன நடந்தது?

Sun Jul 14 , 2024
மணிப்பூரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் குக்கி ஆயுதம் ஏந்திய குழுவினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎப் வீரர் கொல்லப்பட்டுள்ளார். ஜிரிபாம் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மணிப்பூரில் குக்கி இனத்தவருக்கும், மெய்தி இனத்தவருக்கும் இடையே, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இருதரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாநில, ஒன்றிய பாஜக அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவம் […]

You May Like