fbpx

டிடி முதல் மணிமேகலை வரை.. பிரியங்கா எண்ட்ரீ-க்கு பிறகு காணாமல் போன விஜய் டிவி தொகுப்பாளர்கள்..!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பிரியங்கா உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார் மணிமேகலை. அவர் சனிக்கிழமை ஒளிபரப்பான அரையிறுதி சுற்றின் முதல் எபிசோடில் பாதியிலேயே சென்றுவிட்டார். பிரியங்கா அடிக்கடி தன்னுடைய பணியில் குறுக்கிடுவதாகவும், தொடர்ந்து அவர் தனது ஆதிக்கத்தை காட்டி வருவதாலும் அது பிடிக்காததாலும், சுய மரியாதை முக்கியம் என்பதாலும் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக மணிமேகலை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

குக் வித் கோமாளி ஷோவில் 5 சீசன் பணியாற்றி வந்த மணிமேகலையை ப்ரியங்காவிற்காக கருவேப்பிலை மாதிரி தூக்கி எறிந்தது விஜய் டிவி. ஏனென்றால் விஜய் டிவி பொருத்தவரை தற்போது யார் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். யார் மூலம் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கிறது என்பதை வைத்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் ப்ரியங்காவினால் காணாமல் போன விஜய் டிவியின் ஐந்து தொகுப்பாளர்களை பற்றி பார்க்கலாம்.

டிடி: முதல் ஆளாக பலியானது டிடி தான். டிடி தான் விஜய் டிவியின் பில்லர் என்று சொல்லும் அளவிற்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் விஜய் டிவி பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இதை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக கொடுத்து விஜய் டிவி சேனலை தூக்கி நிறுத்தினார். ஆனால் பிரியங்கா வந்த பிறகு டிடி மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததால் விஜய் டிவி சேனல் இவரை கண்டுக்காமல் போய்விட்டது.

பாவனா: மாகாபா உடன் பாவனா சேர்ந்து விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக கொண்டு வந்தார். ஆனால் முதன்முதலாக பிரியங்கா இதில் நுழைந்த பிறகு பாவனாவுக்கு மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததால் டம்மியாக்கியே வந்தார். இதனால் கோபப்பட்ட பாவனா உங்க சங்கார்த்தமே வேண்டாம் என்று சொல்லி விஜய் டிவியை விட்டு ஒதுங்கி விட்டார்.

ஜாக்குலின்: ரக்ஷனுடன் இணைந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ஜார்க்குளின் தொகுத்து வழங்கி வந்தார். பிரியங்கா உள்ளே நுழைந்து ஜாக்குலின் வாய்ப்பை தட்டி பறித்து விட்டார். இதனால் இவர்களுடன் முட்டி மோத முடியாது, அதற்கான வேலையும் நம்மளுடையது இல்லை என்று ஜாக்லின் டீசன்டாக ஒதுங்கி விட்டார்.

ரம்யா சுப்ரமணியன்: இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் மற்றும் ஸ்டார் விஜய் சேனலில் கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் பிரியங்கா டிரெண்டிங் ஆகி கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் ரம்யாவை கழட்டிவிட்டு பிரியங்காவிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதால் ரம்யா, விஜய் டிவி சேனலை விட்டு விலகி விட்டார்.

மணிமேகலை: .குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை ரக்சன் மற்றும் மணிமேகலை எடுத்து நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பிரியங்கா அடிக்கடி தன்னுடைய பணியில் குறுக்கிடுவதாகவும், தொடர்ந்து அவர் தனது ஆதிக்கத்தை காட்டி வருவதாலும் அது பிடிக்காததாலும், சுய மரியாதை முக்கியம் என்பதாலும் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக மணிமேகலை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

Read more ; நிரந்தர டெலிட்.. எல்லா இமெயிலும் காலி.. உங்க Gmail-ல மறக்காம இதை செஞ்சிடுங்க..!! Google வார்னிங்..

English Summary

Let’s take a look at five presenters of Vijay TV who disappeared due to Priyanka’s dominance

Next Post

குட் நியூஸ் மக்களே.. புற்றுநோய்க்கு தடுப்பூசி வந்தாச்சு!! முதல் கட்ட சோதனையே 100% சக்சஸ்..

Sun Sep 15 , 2024
Developed against cancer cells, the vaccine was successful in its first clinical trials. This vaccine is developed by Moderna Pharmaceuticals.

You May Like