fbpx

’செருப்பால அடிக்கணும்’..!! ’கண்டமேனிக்கு பேசுறாங்க’..!! மணிமேகலை விஷயத்தில் கொந்தளித்த வெங்கடேஷ் பட்..!!

CWC மணிமேகலை – பிரியங்கா விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் வெங்கடேஷ் பட் கொந்தளித்து பேசியுள்ளார்.

வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 4 சீசன்களாக நடுவராக இருந்த நிலையில், மணிமேகலையோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல மணிமேகலை மற்றும் அவருடைய கணவர் உசேன் இருவரும் சேர்ந்து வெங்கடேஷ் பட் மற்றும் அவருடைய குடும்பத்தினை ஒரு பேட்டி எடுத்திருந்தனர். அதுவும் பெரிய அளவில் வைரல் ஆனது.

மணிமேகலையை போலவே வெங்கடேஷ் பட் பிரியங்காவோடும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் யாருக்கு சப்போர்ட் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இப்போது வெளிப்படையாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, மணிமேகலை – பிரியங்கா இருவருடைய சண்டையை நான் பார்க்கும்போது நம்ம வீட்டில் உள்ள இரண்டு பெண்கள் எப்படி சண்டை போடுவார்களோ அதுபோலத்தான் இவர்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இருவருமே ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்துருக்காங்க. மணிமேகலை வீட்டை விட்டு வெளியே வந்து பல போராட்டங்களை தாண்டி இன்று இவ்வளவு பெரிய ஆளாக மாறியிருக்கிறார். அதுபோல பிரியங்காவும் அவருடைய திறமையால் எல்லா நிகழ்ச்சியிலும் தனித்துவமாக நடத்தி காட்டி அவரும் பெயர் வங்கி இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் சின்ன பிரச்சனை. ஆனால், அதை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் சிலர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அதிலும், ஒரு சில தாத்தாக்கள் கூட ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தது போல அது இது என்று பிரியங்காவை பற்றியும் மணிமேகலை பற்றியும் அவர்களுடைய கடந்த கால வாழ்க்கையை குறித்து அசிங்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் செருப்பால் அடிக்க வேண்டும். சமூக வலைத்தளத்தில் இப்போது கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று கண்டமேனிக்கு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று காட்டமாக பேசியுள்ளார்.

Read More : தவறாக பயன்படுத்தப்படும் ஆதார் எண்கள்..!! உங்களுக்கும் சந்தேகம் இருக்கா..? உடனே செக் பண்ணுங்க..!!

English Summary

Venkatesh Bhatt has spoken in an interview on the CWC Manimegale – Priyanka affair.

Chella

Next Post

மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு...! தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் குழுவை கலைக்க வேண்டும்...! பாமக கருத்து

Sat Sep 21 , 2024
Fact checking committee of Tamilnadu government should be disbanded..

You May Like