fbpx

ஆண்டுக்கு ரூ.80,000… 21 முதல் 40 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..‌! உடனே விண்ணப்பிக்கவும்

தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்” என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, இ.டி.ஐ.ஐ. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு இடிஐஐ அகமதாபாத் நிறுவனத்துடன் இணைந்து, “தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்” என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது. அகமதாபாத் பாடத் திட்டத்தை தீர்மானிக்கும் பாடத்தின் ஒரு பகுதி அவர்களின் பேராசிரியர்களால் நேரடியாக நடத்தப்படும்.

இந்த வகுப்புகள், வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பாடத் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.80,000 கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. இதில் சேர தகுதி, நிபந்தனைகள் வயது 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் பட்டதாரிகள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம். இந்த பாட நெறி ஒரு தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். வேலை வாய்ப்புக்கான படிப்பு அல்ல.

எனவே தொழில் முனைவோராக மாற முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். பயிற்சி முழுவதும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளில் மிக உயர்ந்த தரத்திற்கு நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இ.டி.ஐ.ஐ. தலைமை அலுவலக எண் (8668107552, 8668101638) மற்றும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட இடிஐஐ ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் (9677835172) அவர்களை தொடர்புகொள்ளவும் மற்றும் அனைத்து விவரங்களையும் இந்த https://www.editn.in. https://youtube.com/shorts/GBnEEtTQiul?feature=share என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

English Summary

Rs.80,000 per annum…Super opportunity for people between 21 to 40 years

Vignesh

Next Post

4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்!. அரசு அதிரடி!

Wed Oct 9 , 2024
Helmets are mandatory for children above 4 years! Government action!

You May Like