fbpx

மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகை.. பிரதமரின் இன்டென்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? – முழு விவரம் இதோ..

மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை கிடைக்கும் இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

வேலைக்கான பயிற்சி வழங்கும் விதமாகவும் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்க நாடு முழுவதும் 500 முன்னணி நிறுவனங்களை அரசு தேர்வு செய்துள்ளது. இந்த நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவதற்காக இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு ஆண்டிற்கு 60 ஆயிரம் கிடைக்கும்.

இதில் ரூ.4,500 மத்திய அரசும், ரூ.500 சம்பந்தப்பட்ட நிறுவனமும் வழங்கும். தகுதி உள்ள இளைஞர்கள், வரும் 12 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட நிறுவனங்கள் பரிசீலனை செய்து நவம்பர் 27 ஆம் தேதிக்குள் தேர்வு பட்டியலை வெளியிடும். அதன்பிறகு பயிற்சிகள் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கும். சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 2024 – 2025 நிதி ஆண்டில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்படும்.

தகுதிகள் என்ன?:

  • வயது வரம்பு 21 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • வேறு எந்த நிறுவனத்திலும் முழு நேர ஊழியராக இருக்க கூடாது.
  • குடும்பத்தில் யாரேனும் அரசு ஊழியராக இருந்தால் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.
  • ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிசிஏ, பிபிஏ, பிஃபார்ம் உள்ளிட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்தை தாண்டக் கூடாது.
  • முதுநிலை பட்டதாரிகள் தொழில் பயிற்சி திட்டத்தில் சேர முடியாது.

எப்படி விண்ணப்பிப்பது?  விருப்பம் உள்ளவர்கள் www.pminternship.mca.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான இந்த தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு தொழில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழில் பயிற்சி அளிக்கும் திட்டத்தில், இந்தியாவில் 500 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

Read more ; 3 விஞ்ஞானிகளுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!! யார் அவர்கள்? கண்டுபிடிப்புகள் என்ன?

English Summary

The central government has introduced a vocational training program for youths who will get an incentive of Rs.5 thousand per month. Under this scheme unemployed youth can apply for vocational training.

Next Post

மகிழ்ச்சி...! குரூப் 4 பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு...!

Wed Oct 9 , 2024
TNPSC notification that Group 4 posts have been increased to 8,932.

You May Like