fbpx

விஜயகாந்த் நினைவு தின பேரணி.. கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த காவல்துறை.. தடையை மீறி தொண்டர்கள் பேரணி..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையாக அனுசரிக்கப்படும் என்பதால் தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்தது. 

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் தே.மு.தி.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. புதிய அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்துள்ள பிரபல நடிகர் விஜய்க்கும் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் தேமுதிகவின் இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். போக்குவரத்துக்கு நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறி பேரணி நடத்த தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more ; 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை நாட்கள்..!! எந்த மாதத்தில் அதிக லீவு வருது தெரியுமா..?

English Summary

The police refused permission to hold a rally towards the memorial of DMDK leader Vijayakanth.

Next Post

மலச்சிக்கலை ஈஸியா எடுத்துக்காதீங்க.. மாரடைப்பு கூட ஏற்படலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..!

Sat Dec 28 , 2024
மலச்சிக்கல் என்பது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிறிய பிரச்சனை இல்லை. அது புறக்கணிக்கப்பட்டால், மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். மலச்சிக்கல் என்பது பலரால் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக இருப்பதால் பலரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனினும் இதனை சரியாக கவனிக்காவிட்டால் இதய பிரச்சினைகள், குறிப்பாக மாரடைப்பு ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மலச்சிக்கல் இதய நோய்களின் ஆபத்து காரணிகளை அதிகரிப்பதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. […]

You May Like