சைபர் மோசடி சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் எஸ்.பி.ஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து நடக்கும் சைபர் மோசடி சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு பரிசு அல்லது Reward Points கிடைத்திருப்பதாக வரும் குறுஞ்செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று எஸ்.பி.ஐ. வங்கி எச்சரித்துள்ளது.
எஸ்பிஐ ரிவார்டுகளைப் பெறுவதற்கு APK கோப்பைப் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யும்படி மெசேஜ் வந்திருந்தால், அதை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்றும் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.