நடிகரும் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளருமான அருள்மணி நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது ரசிகர்களும் அதிமுக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அருள்மணி. சினிமாவில் நடிப்பதுடன் அரசியல் மேடை, இயக்குநர் பயிற்சி பள்ளி என பல பணிகளில் ஈடுபட்டு வந்தார். அருள்மணி அழகி, தென்றல், தாண்டவகோனே போன்ற பல்வேறு திரைப்படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அரசியலில் ஈடுபாடு காரணமாக அதிமுகவில் இணைந்து செயல்படத் தொடங்கினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்துவந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை தேர்தல் பிரச்சார களத்திற்கு இடையே ஓய்வு எடுத்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு அருள்மணியின் உயிர் பிரிந்தது. இதனையறிந்த அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read More : ’காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருக்கா’..? அப்படினா உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு..!!