பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.4 கோடிக்கு வாங்கிய காளையை இறைவனுக்கு பலியிட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வழங்கியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதி .
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இது ஹஜ் பெருமாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை பறைசாற்றும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்கு பலியிட்டு இறைச்சியை நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாகீத் அப்ரிதி ரூ.4 கோடி மதிப்புள்ள காளையை விலைக்கு வாங்கியுள்ளார். காளையை பிடித்து நடந்து செல்லும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த காளையை இறைவனுக்கு பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்துள்ளார். இதே போன்று ஒரு கையில் தலை துண்டிக்கப்பட்ட ஆட்டின் தலையையும் கையில் பிடித்தபடியும், மற்றொரு கையில் மகளையும் பிடித்தபடி புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.