கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியில் அமைச்சர் வீட்டருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரியில் அமைச்சரின் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் கார்தீப்பிடித்த சம்பவம் நடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜின் வீடு உள்ள பாலூர் சந்திப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆசீம் என்பவர் கரை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.திடீரென காரின் முன்பக்கத்தில் புகை வந்துள்ளது. இதைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி வெளியேறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே தீப்பிடித்து கார் முழுவதும் சேதமடைந்தது. தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து காரை போராடி தீயை அணைத்தனர் .