அமைச்சர் வீட்டருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு …

கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியில் அமைச்சர் வீட்டருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரியில் அமைச்சரின் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் கார்தீப்பிடித்த சம்பவம் நடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜின் வீடு உள்ள பாலூர் சந்திப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆசீம் என்பவர் கரை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.திடீரென காரின் முன்பக்கத்தில் புகை வந்துள்ளது. இதைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி வெளியேறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே தீப்பிடித்து கார் முழுவதும் சேதமடைந்தது. தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து காரை போராடி தீயை அணைத்தனர் .

Next Post

பிக்பாஸ்-6 ல் ஒரு நாளைக்கு ஜி.பி.முத்துக்கு இவ்வளவு சம்பளமா?

Tue Oct 25 , 2022
பிக்பாஸ் -6 போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்ற ஜி.பி.முத்து நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு வெளியேறிய நிலையில் அவருக்கு ஒரு நாளைக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய்டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் 6-வது சீசுன் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இதில் முதல் ஆளாக உள்ளே நுழைந்தது ஜி.பி.முத்துதான். அதே நேரத்தில் தானே முன் வந்து தன் மகனுக்காக நான் வெளியேறுகின்றேன் என கூறியதும் ஜி.பி.முத்துதான். […]
பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஜிபி முத்து..!! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!!

You May Like