#பெரம்பலூர் :பாம்பை கடித்து கொன்று தன்னை வளர்த்த வீட்டின் நபர்களை காப்பாற்றிய பூனை..!

பெரம்பலூர் மாவட்ட பகுதியில் அரணாரை தெருவில் சிவக்குமார் , என்கிற விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். நேற்றைய தினத்தில் விடுமுறையாக இருந்ததால் குடும்பத்தினருடன் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டுள்ளார். 


இந்த நிலையில், காலை நேரத்தில் வீட்டிற்குள் பாம்பு ஒன்று உள்நுழைய முற்பட்டிருக்கிறது. அந்த பாம்பினை கண்ட வளர்ப்பு பூனை திடீரென உள்நுழைய முயன்ற அந்த பாம்புடன் நீண்ட நேரம் சண்டை போட்டது. இதனில் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு  குடும்பத்தினர் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளனர். 

இதனை தொடர்ந்து வெகு நேரமாக இரண்டிற்கும் இடையே சண்டை நடந்துள்ளது. அப்போது பூனை பாம்பின் தலையை சட்டென்று கவ்வி பிடித்துள்ளது. மேலும் குதறி கொன்று தூக்கி சென்றுள்ளது. இறந்த பாம்பானது பெரும் விஷமுள்ள கட்டு விரியன் பாம்பின் வகையை சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. 

வீட்டுக்குள் நுழைய முயன்ற கட்டு விரியன் பாம்பை கொன்று குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை குறித்து தகவலறிந்த அக்கம், பக்கத்தினர் ஆர்வமாக வந்து பூனையை பார்த்து கொண்டு சென்றனர், இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

#அரியலூர் : இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வாகிய இளைஞர்.. உதவி செய்த முதலமைச்சர்..!

Tue Nov 22 , 2022
சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  கார்த்திக் எனும் இளைஞர் இந்திய ஹாக்கி அணியின் சார்பாக விளையாடுவதற்கு கடந்த மே மாதத்தில் தேர்வாகி இருந்தார். இத்தகைய நிலையில், கார்த்திக் உரியமுறையில் பயிற்சி பெறவும், அடுத்தகட்ட நிலைக்கு செல்வதற்கும் தகுந்த வசதிகள் இன்றி தவித்து வந்தார். இவ்வாறு பெற்றோர்களின் வறுமையை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடனே அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை அழைத்து ஹாக்கி வீரர் கார்த்திக்கிற்கு தேவையான உதவிகளைச் […]
n4440733481669099830927fcf937aaac9d62ceaac7f03e91bed7b005a58f4b14b4ed9dd8b0dbeff85a8c64

You May Like