சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக ஜூலை 23ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் பதவியில் இருந்தபோது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அனுமதிக்கப்படாத விதத்தில் சொத்துக்கள் குவித்ததாக கூறி, கடந்த 2015-ம் ஆண்டு திமுக எம்.பி ஆ. ராசாவுக்கு எதிராக CBI வழக்குப்பதிவு செய்தது.. 7 ஆண்டுகள் நடந்த விசாரணைக்கு பின்னர் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட்,
மங்கள் டெக் பார்க் லிமிட்டெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த 2023 ஆம் ஆண்டில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.5 கோடியே 53 லட்சம் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த வழக்கி விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக ஜூலை 23ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் திமுக எம்.பி ஆரா நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read more: இந்த உணவு பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது விஷத்திற்கு சமம்..!! கவனமா இருங்க..