16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தம்பதியினர் கைது…புதுச்சேரியில் பரபரப்பு..!

புதுச்சேரி கோரிமேடு மோகன் நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்வதாக தன்வந்திரி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்தனர்.


அப்போது கடலூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் அவரது மனைவி உமாவும் அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பாலாஜி, அங்கு இருந்த வாடிக்கையாளரான புதுவையைச் சேர்ந்த பச்சையப்பன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின் விசாரணை நடத்தினர்.

இதில் பாலாஜியும் அவரது மனைவியும் சிறுமியை 20 வயது கல்லூரி மாணவி என்று சொல்லி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி இருக்கிறார். இதுவரை 25 பேர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து தம்பதியினர் உட்பட 27 பேர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். 22 பேரை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் உமா உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

2023 ஐபிஎல் அப்டேட்...!! புதிய விதிமுறைகள் அறிமுகம்..! பிசிசிஐ திட்டம்..!

Sun Sep 18 , 2022
ஐபிஎல் முதலிய உள்நாட்டு கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் பிசிசிஐ, சோதனை முறையாக சையத் முஸ்தாக் கோப்பை தொடரில் TACTICAL SUBSTITUTE முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இக்கால கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையிலும், போட்டிகளின் சுவாரசியத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும் பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடரான சையத் முஸ்தாக் கோப்பை கிரிக்கெட் தொடரில் TACTICAL SUBSTITUTE முறை அறிமுகப்படுத்தப்பட […]
2023 ஐபிஎல் அப்டேட்...!! புதிய விதிமுறைகள் அறிமுகம்..! பிசிசிஐ திட்டம்..!

You May Like