ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி அவருடைய கோபம் தான் மனிதன் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த தெரிந்து கொண்டால் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து விடலாம்.
அப்படி கோபத்தை கட்டுப்படுத்த தெரியாத நபராக இருந்தால், அந்த கோபம் ஒரு மனிதனை மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாக்கிவிடும்.
அப்படி ஒரு சம்பவம் தான் திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் நடைபெற்றுள்ளது.
அதாவது, புழல் பகுதி அம்பத்தூர் சாலையில் சென்ற மாதம் 21ஆம் தேதி ஒரு தனியார் பள்ளி அருகில் வட மாநில லாரி ஒன்று சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இரு டிரைவர்கள் இருந்தார்கள் அவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனையின் காரணமாக, ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இந்த பிரச்சனையில் கோபப்பட்ட இன்னொரு லாரி டிரைவர் திடீரென்று அந்த லாரியை இயக்கி வந்து, லாரிக்கு முன்னால் நின்று கொண்டு இருந்த இன்னொரு ஓட்டுனரின் மீது லாரியை மோதினார். இதில் அதே இடத்தில் லாரி முன்னாள் நின்று கொண்டிருந்த நபர் உடல் நசுங்கி, துடிதுடித்து, பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த புழல் காவல் நிலைய காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அவர் நடத்திய அதிரடி விசாரணையில், உயிரிழந்த லாரி டிரைவர் புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர் 2வது தெருவை சார்ந்த சீனிவாசன்( 50) என்ற விபரம் தெரிந்தது.
அதேபோல அவர் மீது லாரியை ஏற்றி படுகொலை செய்த ஓட்டுனர் அந்த பகுதியில் இருந்து தப்பிச் சென்று விட்டார். இந்த வழக்கில் சீனிவாசனை கொலை செய்த நபரை உடனடியாக கைது செய்வதற்காக, கொளத்தூர் துணை ஆணையாளர் ராஜாராம் குற்றவாளியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
அவருடைய உத்தரவினடிப்படையில் புழல் தரக உதவி ஆணையாளர் ஆதிமூலம் தலைமையில், ஆய்வாளர் சண்முகம் தலைமையில் ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை தேடி வந்தனர். இந்த சூழ்நிலையில் தான் உடல் பகுதியில் சுற்றி வந்து கொண்டிருந்த திருச்சி மாவட்டம் காட்டூரை சார்ந்த லாரி டிரைவர் பிச்சையப்பா (58) என்ற நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், லாரியை மோதி கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் தம்பி என்ற விவரம் தெரிய வந்தது. அதாவது சீனிவாசனை அவருடைய தம்பியே லாரி ஏற்றி கொலை செய்திருக்கிறார்.
மது போதையில் ஏற்பட்ட வாய் தகராறு, முடிவில் கொலையில் போய் முடிந்ததாக தெரியவந்திருக்கிறது. அதன் பிறகு பிச்சையப்பாவை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.