மனைவியை தரக்குறைவாக பேசிய மீனவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கனகராஜ், அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இருவரும் மீனவர்கள். நேற்று மாலை கனகராஜ், குடிபோதையில் இருந்தார். அந்த வழியாக ஜெயபாலின் மனைவி ஜெயந்தி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கனகராஜ், ஜெயந்தியிடம் தகராறு செய்ததுடன், அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயந்தி, தனது கணவர் ஜெயபாலிடம் கூறினார்.


இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால், கனகராஜிடம் “ஏன் என் மனைவியை தவறாக பேசினாய்? என்று தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயபால் அருகில் இருந்த இரும்பு கம்பியால் கனகராஜின் பின் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த கனகராஜ் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

மாநில அளவில் 2ம் இடம் பிடித்த மாணவிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா…..? கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த மாணவி……!

Sun Jun 18 , 2023
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் 6 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ரத்தம் மற்றும் பரிசுகளை வழங்கி நேற்று கௌரவித்தார் அந்த விதத்தில் தொகுதிக்கு 6 பேர் வீதம் 1404 பேருக்கு விஜய் பரிசு வழங்கினார். அதில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் முழுமையான மதிப்பெண்களான 600 மதிப்பெண்களைப் பெற்ற திண்டுக்கல் ஐ சார்ந்த மாணவி நந்தினிக்கு […]
WhatsApp Image 2023 06 18 at 4.27.05 PM

You May Like