பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் ரோஹித் சாஹ்னி என்ற நபர், மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை அளில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டுத்தப்பியிருக்கிறார். மகளைக் காணவில்லை என்று தேடி வந்த தாயிடம், அக்கம் பக்கத்தினர், அவர் ரோஹித்துடன் சென்றதாகக் கூறியிருக்கிறார்கள்.
ரோஹித் இருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது 9 வயது சிறுமி ரத்தவெள்ளத்தில் கிடந்தார். தனது மகளைப் பார்த்து கதறி அழுத தாய், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சிறுமியை அனுமதிக்காமல் பாட்னா கொண்டு செல்ல அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், 6 மணி நேரம் காக்கவைக்கப்பட்டு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே சிறுமி பலியாகியிருக்கிறார். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததே மகள் பலியானதாக அவரது குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், பிகார் மாநில சட்டம் ஒழுங்கு மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் சிறுமி காப்பாற்றப்பட்டிருப்பார் என்று மக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் மே 26ஆம் தேதி நடந்துள்ளது.
சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், ஏற்கனவே ஆம்புலன்ஸ் வர 2 மணி நேரம் ஆனது. பிறகு மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்தோம். மருத்துவமனை வாயிலேயே, படுக்கை ஒதுக்கப்படுவதற்காக 6 மணிநேரம் காத்திருந்தோம். ஆனால் மறு நாள் குழந்தை இறந்துவிட்டார். மருத்துவமனையில் அலட்சியம் தான் காரணம் என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார்கள்.
Read more: பூசாரி பார்த்த மொரட்டு வேலை..!! வலையில் சிக்கிய தொழிலதிபர்..!! சூனியத்தால் சுக்குநூறான குடும்பம்..!!