“முஸ்லிமா மாறிடு இல்லன்னா டைவர்ஸ் தான்”! மாப்பிள்ளையை மதம் மாற சொல்லிய மணப்பெண் குடும்பத்தார்!

உத்திரபிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இந்து கணவரை மணப்பெண்ணும் அவரது குடும்பத்தாரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்துவதாக அலிகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் கணவர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஃபரித்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் சிங். இவர் ஜுலுபூர் கிராமத்தைச் சார்ந்த முஸ்கான் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி கடந்த டிசம்பர் மாதம் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது. இந்நிலையில் தற்போது தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாற வற்புறுத்துவதாக அந்தக் கணவர் அஜய் குமார் சிங் அலிகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக அவரது மனைவி முஸ்கான் தந்தை யூனுஸ் அலி தாயார் ஷெஹான்ஷா சகோதரர் ஃபர்குவான் அலி மற்றும் மைத்துனர் சுகேல் கான் ஆகியோர் மீது காவல்துறையினர் புதன்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.


காவல்துறையின் கூற்றுப்படி மார்ச் மாதம் 26 ஆம் தேதி அவர்கள் வீட்டில் இறைச்சி சமைப்பது தொடர்பாக கணவன் மற்றும் மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. அஜய் குமார் சிங் புனித நாட்களில் இறைச்சி சமைக்க வேண்டாம் என மனைவியிடம் தெரிவித்திருக்கிறார். அதனால் கோபம் அடைந்த அவரது மனைவி அஜய் குமாரை இஸ்லாமிய மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தியுள்ளார். அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தி இருக்கின்றனர். மதம் மாறவில்லை என்றால் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள போவதாகவும் விரட்டி இருக்கிறார் முஸ்கான். ஒரு இந்துவை முஸ்லிமாக மாற கட்டாயப்படுத்துவது தவறு என காவல்துறை தெரிவித்துள்ளது . இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்த போது அக்பராபாத் காவல் நிலையத்தில் முஸ்கானின் குடும்பத்தினர் மற்றும் கட்டாய திருமண வழக்கு பதிவு செய்தனர். அப்போது முஸ்கான் தான் விருப்பபடித்தான் அஜய் குமாரை திருமணம் செய்ததாக தெரிவித்து அந்த வழக்குகளை ரத்து செய்ய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

பகீர்.......! தலைநகர் டெல்லியில் கொசுவர்த்தியால் 6 பேர் உயிரிழந்த சம்பவம்! காவல்துறை அதிர்ச்சி தகவல் !

Fri Mar 31 , 2023
டெல்லியில் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்கிய ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் டெல்லியின் சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் தினமும் வீட்டில் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். நேற்ளிரவும் அதேபோல கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு உறங்கச் சென்றுள்ளனர். இன்று காலை வெகு நேரமாகியும் அவர்களின் வீடு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் […]
IMG 20230331 WA0124

You May Like