மெகா வாய்ப்பு…! 10,000-க்கும் மேற்பட்ட காலி பணி…! நாளை நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…!

அரியலூரில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஐனா (DDU-GKY) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்புறத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை அரியலூர் அரசினர் கலைக் கல்லூரியில் காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரை நடைபெற உள்ளது.


இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆண்/பெண் (இருபாலரும்) திரளாக கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுடன் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஐனா (DDU-GKY) திட்டத்தின் கீழ் 20க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பினை இளைஞர்களுக்கு வழங்க உள்ளார்கள். வருகை தரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் தங்களது சுய விபர குறிப்பு (Bio –Data) ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

5 ஆண்டுகள் சம்மதத்துடன் பாலியல் உறவில் ஈடுபடுவது பலாத்காரமாக கருத முடியாது!... கர்நாடக ஐகோர்ட்!

Thu Mar 16 , 2023
5 ஆண்டுகள் ஆணும் பெண்ணும் ஒருமித்த சம்மதத்துடன் பாலியல் உறவில் இருந்ததை பலாத்காரம் என கருதமுடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த இளைஞர், 5 ஆண்டுகளாக பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பிய போது சாதி வேறுபாடு காரணமாக அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்து அந்த பெண்ணுடன் பல […]
Rape is Rape Karnataka High Court

You May Like