ஏற்கனவே திருமணமானதை மறைத்த காதலன்..!! தூக்கில் தொங்கிய காதலி..!! வேதனையில் வாலிபரும் தற்கொலை..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் குரு பிரசாத் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால், நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. மேலும், குரு பிரசாத்திற்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. ஆனால், தனக்கு நடந்த திருமணத்தை மறைத்து குரு பிரசாத், பவித்ராவை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குரு பிரசாத்திற்குத் திருமணம் நடந்த விவகாரம் பவித்ராவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. காதலன் தன்னை ஏமாற்றியதால் மன வேதனை அடைந்த பவித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக பவித்ராவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, காதலி பவித்ரா தற்கொலை செய்து கொண்டதை அறிந்த குரு பிரசாத், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

உடன் பணியாற்றியவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…..! செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!

Sat Jul 1 , 2023
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்( 65). இவரும், புலிப்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரும் பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடம் அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையில் தகராறு உண்டாகி உள்ளது. இதில் மனோகரனை கீழே தள்ளிவிட்ட சக்திவேல், அவரை தாக்கியுள்ளார். இதன் காரணமாக, தலையில் பலத்த காயமடைந்த மனோகரன் […]

You May Like