பீகார் மாநிலத்தில் நாயை பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தான் பாதுகாப்பு இல்லை என்ற சூழலில் விலங்குகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழலே நிலைமை வருவதாக இச்சம்பவம் அமைந்திருக்கிறது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றனர். இச்சம்பவம் ஹோலி பண்டிகை தினத்தன்று நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றே காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநிலத்தின் புல்வாரி ஷெரீஃப் நகரில் உள்ள பைசல் காலனியில் தான் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அந்த நபர் செய்த காட்சிகள் அனைத்தும் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றன. காலணியில் உள்ள நாய் மீது அந்த நபர் செய்யும் இயற்கைக்கு முரணான காட்சிகள் சி சி டிவியில் பதிவாகி இருக்கிறது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அந்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்தது. இந்த புகாரைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற காம கொடூரர்களால் விலங்குகளுக்கு கூட நாட்டில் பாதுகாப்பில்லை என மக்கள் விமர்சித்து வருகின்றனர்.