திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நண்பனே மனைவியின் கள்ளக்காதலன் ஆனதால் ஆத்திரமடைந்த நபர் நண்பனை அறிவாளால் வெட்டிவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் ஆறுமுகத் தோட்டம் பகுதியைச் சார்ந்தவர் செந்தில் நாராயணன் இவரது வயது 42. இவரது நண்பர் கிருபாகரன். நீண்ட காலமாக இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்ததால் செந்தில் நாராயணன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார் கிருபாகரன். இந்நிலையில் செந்தில் நாராயணனின் மனைவிக்கும் கிருபாகரனுக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டு அது பின்னாலில் முறை தவறிய காதலாக மாறியுள்ளது. செந்தில் நாராயணனை சந்திக்கும் சாக்கில் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்துள்ள கிருபாகரன் அவரது மனைவியுடன் ஆன காதலை வளர்த்திருக்கிறார். இருவரும் செந்தில் நாராயணன் வீட்டில் இல்லாத சமயத்தில் தனிமையில் சந்தித்து மேலும் காதலை வளர்த்துக் கொண்டனர்.
இந்த விஷயம் செந்தில் நாராயணனுக்கு தெரிய வரவே அவர் மனைவியின் மீது கோபம் கொண்டு அவரிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவியை அழைத்து வருவதற்காக அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். ஆனால் அவரது மனைவி இவருடன் வர மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த செந்தில் நாராயணன் தனக்கு துரோகம் செய்த நண்பன் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என அவரது நண்பன் கிருபாகரனை அறிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டார். இதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் வாழ்க்கையின் வெறுப்பில் இருந்த செந்தில் நாராயணன் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரது பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.