ரோபோவுடன் தொடர்ச்சியாக பேசி வந்த நபர் திடீர் தற்கொலை! காவல்துறை தீவிர விசாரணை!

பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த நுண்ணறிவுத்திறன் கொண்ட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ரோபோட் உடன் பேசிக் கொண்டிருந்த ஒரு மனிதர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான நபர் எலிசா என்ற நுண்ணறிவு திறன் கொண்ட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ரோபோவுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்நாட்டு காவல்துறையும் புலனாய்வுத் துறையும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றன. அந்த நபர் தனது மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை இதற்குப் பின் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?என தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவரது மனைவி தனது கணவர் போதைக்கு அடிமையானவர் போல் ஆறு வாரங்களுக்கும் மேலாக எலிசா என்ற ரோபாட்டுடன் தொடர்ச்சியாக பேசி வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியானதாகவும் மர்மம் நிறைந்ததாகவும் இருப்பதாக அவரது மனைவி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

"முஸ்லிமா மாறிடு இல்லன்னா டைவர்ஸ் தான்"! மாப்பிள்ளையை மதம் மாற சொல்லிய மணப்பெண் குடும்பத்தார்!

Fri Mar 31 , 2023
உத்திரபிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இந்து கணவரை மணப்பெண்ணும் அவரது குடும்பத்தாரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்துவதாக அலிகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் கணவர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஃபரித்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் சிங். இவர் ஜுலுபூர் கிராமத்தைச் சார்ந்த முஸ்கான் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து […]
IMG 20230331 WA0108

You May Like