திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம் அடுத்த முகாம்பிகை நகர் 2வது வீதியில் உள்ள வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று முன்தினம் இரவு வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, வீட்டிற்குள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டும், ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். இதையடுத்து, இருவரின் […]

சமீபகாலங்களில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக குடும்ப உறவுகள் சீர்குலையும் நிலை அதிகரித்து வருகிறது. முன்பு எந்தச் சூழ்நிலையிலும் குடும்பத்தினர் ஒன்றாக இருந்து பிரச்சினைகளை சமாளிக்கும் மனப்பான்மை இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் மன அழுத்தம், பொருளாதார சுமை மற்றும் மனநிலை பாதிப்பு போன்ற காரணங்களால் சிலர் தாங்க முடியாமல் தற்கொலை போன்ற தீவிர முடிவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதிலும் மிகவும் கவலைக்கிடமானது, சில நிகழ்வுகளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் […]

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கும் விழிஞ்ஞத்தைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், சம்பவத்தன்று விக்னேஷ்வரி அவரது கணவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வழக்கம் போல், விக்னேஷ்வரியின் மாமனார் சந்திரன், மாலை வீட்டிற்கு வந்துள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் […]

சமீப காலமாக குடும்ப வன்முறை மற்றும் மனரீதியான துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. குறிப்பாக, திருமணமான சில ஆண்டுகளிலேயே குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக பலர் பாதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரை சேர்ந்தவர் 27 வயதான அனிகேத் பாலாசாஹேப் ஜக்தாப். […]

தர்மபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 45 வயதான சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலுடன் பங்குசந்தை மற்றும் ஆன்லைன் டிரேடிங் செய்து வரும் இவருக்கு, 35 வயதான சரண்யா என்ற மனைவியும், 14 வயதான சாத்விகா என்ற மகளும் உள்ளனர். இவரது மகள், தனியார் பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் […]