அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி.. பிடிகொடுக்காமல் இருக்கும் பாமக, தேமுதிக..!!

EPS PMK DMDK

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில், நேற்று முதல் ஜூலை 23-ம் தேதி வரை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.


முதற்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பயண தொடக்க நிகழ்விற்கு, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் பரப்புரையை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியையும் விரைவில் இறுதி செய்யத் தீவிரம் காட்டியுள்ளார். தற்போது பாஜக, அமமுக, இந்தியக் குடியரசு கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளது, நேற்றைய தினம் புதிதாக இந்திய ஜனநாயக கட்சி கூட்டணியில் இணைந்துள்ளது. சட்டமன்ற தேர்ந்த நெருங்கும் சூழலில் பாமக, தேமுதிக தங்களது நிலைபாட்டை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

Read more: படுத்த படுக்கையான கணவர்… பாய் பிரண்டுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி..!! பகீர் பின்னணி

Next Post

நாளை நாடு தழுவிய பாரத் பந்த்.. 25 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.. இந்த சேவைகள் பாதிக்கப்படலாம்...

Tue Jul 8 , 2025
மத்திய அரசை கண்டித்து நாளை 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாடு தழுவிய பாரத் பந்த்-ல் ஈடுபட உள்ளனர்.. மத்திய அரசின், தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, தேச விரோத கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.. 10 மத்திய தொழிற்சங்கங்ள் இணைந்து நடத்தும் இந்த பாரத் பந்த் காரணமாக, […]
farmers protest 1708017243928 1751938230957

You May Like