தீயாய் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்..!! வாரத்திற்கு கோடிக்கணக்கானோர் பாதிப்பு..? பீதியில் மக்கள்..!!

புதிய வகை கொரோனாவால் வாரத்திற்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்தது. சீனாவில் தொடங்கினாலும் மற்ற நாடுகளில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதே தவிர, சீனாவில் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை. தங்கள் நாட்டில் வைரஸை கட்டுப்படுத்திவிட்டதாக சீனா கூறியது. ஆனால், சீனா உண்மையை மறைப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், சீனாவுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.


வீரியம் மிக்க புதிய வகை கொரோனா அலைக்கு சீனா தயாராகி வருவதாக மூத்த சுகாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார். இந்த புதிய கொரோனா அலை, ஜூன் மாத இறுதியில் உச்சத்தை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த வகை தொற்றால், நாட்டில் வாரத்திற்கு சுமார் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் சீன மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் முதல் ஒமைக்ரான் வைரஸின் புதிய மாறுபாட்டால், சீனாவில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து இம்மாத இறுதிக்குள் 4 கோடி பேரும், அடுத்த மாத இறுதிக்கும் வாரந்தோறும் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

CHELLA

Next Post

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவையொட்டி ரூ. 75 நாணயம் அறிமுகம் - மத்திய அரசு அறிவிப்பு

Fri May 26 , 2023
இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு ரூ. 75 நாணயத்தை புழக்கத்திற்கு விடப்போவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகிரியிலும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வலதுபுறமாக இடம்பெறுகிறது. இந்திய ரூபாய் சின்னம் மற்றும் 75 என்ற எண் அசோகா சின்னத்தின் கீழ் […]
parliament 1607534145

You May Like