சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வு சட்ட உதவியாளர் பிரிவில் (Madras High Court Research Law Assistant) மொத்தம் 28 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டம் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் – ஆய்வு சட்ட உதவியாளர்
பணி விவரம்: தேர்வாகும் நபர்களுக்கு முழு நேர பணி. நீதிமன்ற பணிகள் மட்டுமின்றி, நிர்வாகப் பணிகளிலும் ஈடுபட வேண்டும். நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்குகள், ஆய்வுப் பணி, நீதிபதிகளுக்கு உதவியாக இருப்பது மற்றும் நீதிபதிகள் வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதார்கள் ஜூலை 1-ம் தேதியின் படி, 30 வயதை நிறைந்திருக்கக்கூடாது.
கல்வித்தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* 10+2+3+3 அல்லது 10+2+5 அல்லது 10+2+4+3 என்ற அடிப்படையில் கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
* கல்லூரி நேரத்திலேயே அனைத்து பருவத்தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* கடந்த 5 கல்வி ஆண்டில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். முதுகலை அல்லது அதற்கு மேற்ப்பட்ட படிப்புகளை தொடர்பவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
தேர்வு செய்யப்படும் முறை: சென்னை அல்லது மதுரையில் வைவா நடத்தப்படும். அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் நபர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அல்லது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 1 வருடத்திற்கு நியமனம் செய்யப்படுவார்கள்.
சம்பளம்: ஆய்வு சட்ட உதவியாளர் பதவியில் தேர்வாகும் நபர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.50,000 வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? உயர்நீதிமன்றத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆர்வமாக உள்ளவர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முகவரி: The Registrar General, High Court, Madras-600 104.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2025.
Read more: தகுதி இருந்தாலும் இவர்களுக்கு ரூ. 1000 கிடைக்காது.. மகளிர் உரிமைத்தொகை மேஜர் அப்டேட்..!



