திருப்பதிக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.. வழியில் பயங்கரம்.!

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் திருத்தணி அருகாமையில், தமிழக ஆந்திர எல்லையான பொன்பாடி பகுதியில், சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி ஒன்று அமைந்துள்ளது.

நேற்று அந்த சோதனைச் சாவடி அருகே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், பலத்த காயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

காவல்துறையினரின் விசாரணையில், அந்த நபர் சென்னை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. மேலும், விசாரணையில் அவர் கூறியதாவது,” நேற்று இரவில் திருப்பதிக்கு சென்ற போது பேருந்து தமிழக ஆந்திர எல்லையில் உள்ள பொன்பாடி என்ற சோதனைச் சாவடி ஒன்றில் உணவு சாப்பிட நிறுத்தினர்.

அந்த சமயத்தில் , சிறுநீர் கழிப்பதற்காக அங்கிருந்து சிறிது தூரம் சென்றபோது அங்கு இருந்த மர்ம நபர் 3 பேர் என்னை கட்டையால் மற்றும் கையால் பலமாக தாக்கினர். மேலும் என் சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் 3800 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடிவிட்டனர்” என கூறியுள்ளார்.

தற்போது அவருக்கு தலையில் ஏற்பட்ட பயங்கர தாக்குதலால் 8 தையல்கள் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து விவரங்களை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Baskar

Next Post

#Breaking..!! 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Mon Nov 7 , 2022
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி இன்று வெளியாகிறது. 2023 கல்வியாண்டிற்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிட உள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் பாடஅளவு குறைக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு அட்டவணை இன்று வெளியாக இருக்கிறது. முன்னதாக, 2023 கல்வியாண்டிற்கான 10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி […]

You May Like