வீட்டின் முன்பு அடிக்கடி சிறுநீர் கழித்த நபர்..!! தட்டிக்கேட்டதால் குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்ட கொடூரம்..!!

வீட்டின் முன்பு சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டதால், வீட்டின் உரிமையாளர் உள்பட குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோட் கிராமத்தில் பிந்து ஷர்மா என்ற நபர், அப்பகுதியில் உள்ள விகாஷ் சிங் என்பவருடைய வீட்டின் முன்பு பட்டப்பகலில் அடிக்கடி சிறுநீர் கழித்து வந்துள்ளார். பிந்து சர்மாவின் இந்த கீழ்த்தரமான செயலால் ஆத்திரமடைந்த விகாஷ் சிங்கின் குடும்பத்தினர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இதனால், கோபத்தில் கொந்தளித்த பிந்து ஷர்மா, குடிபோதையில் தனது நண்பருடன் விகாஷ் சிங் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ளவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

வீட்டின் முன்பு அடிக்கடி சிறுநீர் கழித்த நபர்..!! தட்டிக்கேட்டதால் குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்ட கொடூரம்..!!

இந்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்த 3 பேர் படுகாயமடைந்தனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் 12 வயது சிறுவன் மட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், குற்றவளியான பிந்து ஷர்மாவையும், அவருடைய நண்பரையும் கைது செய்து சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு புதியவரா நீங்கள்..? அப்படினா கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Thu Jan 5 , 2023
நீங்கள் ஒரு பங்குச்சந்தை முதலீட்டாளராகவோ அல்லது வர்த்தகத்தைத் தொடங்கத் திட்டமிடும் நபராகவோ இருந்தால், நீங்கள் தற்போதைய வர்த்தக விடுமுறை காலண்டரைக் கண்காணிக்க வேண்டும். தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச் (BSE) விடுமுறைப்பட்டியல் இரண்டும் முக்கியமானவை. பின்னர், கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்களுக்கான விடுமுறை பட்டியல் உள்ளது. அவற்றில் முதன்மையானது மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) ஆகும். இந்த எல்லா பரிமாற்றங்களும் விடுமுறை நாட்களின் தொகுப்பைக் கொண்டுள்ளன. நீங்கள் வர்த்தகம் […]

You May Like