மெக்சிகோவின் தெற்கு மாநிலமான குவெரேரோவில் இன்று 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, பசிபிக் கடற்கரை ரிசார்ட்டான அகபுல்கோவிற்கு அருகிலுள்ள குவெரேரோவின் தெற்கு மாநிலத்தில் உள்ள சான் மார்கோஸ் நகரத்திற்கு அருகில் இருந்தது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் 21.7 மைல்கள் (35 கிலோமீட்டர்) ஆழத்தில், அகபுல்கோவிலிருந்து வடகிழக்கே சுமார் 57 மைல் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள குவெரேரோவின் ரான்சோ விஜோவிலிருந்து 2.5 மைல் வட-வடமேற்கே ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது..
விரிவான சேத மதிப்பீடு நிலுவையில் இருந்தபோதிலும், ஆரம்ப அறிக்கைகள் இந்த அதிர்வுகள் உயரமான கட்டிடங்களையும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டங்களையும் பாதிக்கும் அளவுக்கு வலுவாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இது தலைநகரின் பாதிப்புக்குள்ளாகும் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும், இந்த நிலநடுக்கத்தின் விளைவுகள் அகபுல்கோவின் கடலோரப் பகுதிகள் முதல் அதிக மக்கள் தொகை கொண்ட நகர மையம் வரை உணரப்பட்டது, இது மெக்சிகோவின் புவித்தட்டு செயல்பாடு மிகுந்த பிராந்தியத்தில் உள்ள நில அதிர்வு அபாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இருப்பினும், குவெரேரோவில் உடனடியாக எந்த சேதமும் ஏற்படவில்லை என்று மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம், அந்த மாநிலத்தின் ஆளுநருடன் பேசிய பிறகு எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். தலைநகரான மெக்சிகோ சிட்டியில் எந்த சேதமும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.
அவர் காலை செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது நிலநடுக்க எச்சரிக்கை ஒலித்தது, அப்போது அதிபர் பத்திரிகையாளர்களுடன் அமைதியாக வெளியேறினார்.
தெற்கு மற்றும் மத்திய மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்
வலுவான நிலநடுக்கம் தெற்கு மற்றும் மத்திய மெக்சிகோவை உலுக்கியது, நில அதிர்வு எச்சரிக்கை ஒலித்ததால், அதிபர் கிளாடியா ஷெயின்பாமின் புத்தாண்டுக்கான முதல் செய்தியாளர் சந்திப்பில் இடையூறு ஏற்பட்டது. மெக்சிகோ சிட்டி மற்றும் அகபுல்கோவில் வசிப்பவர்களும் சுற்றுலாப் பயணிகளும் நிலநடுக்கம் தொடங்கியதும் தெருக்களுக்கு விரைந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே, மெக்சிகோ சிட்டியில் உள்ள அதிகாரிகள் வழக்கமான பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்டனர், மேலும் நிலநடுக்கத்தின் விளைவாக தலைநகரின் உள்கட்டமைப்புக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படவில்லை என்பதை ஷெயின்பாம் உறுதிப்படுத்தினார்.



