மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களால் செப்டம்பர் 2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில், மூத்த குடிமக்களுக்கு தேவையான பின்வரும் சேவைகள் இடம் பெற்றுள்ளது,ன. அதன்படி,அருகில் உள்ள முதியோர் இல்லங்கள் விவரங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகங்கள் விவரங்கள். மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் அதிகாரிகள் விவரங்கள், மாற்று மருத்துவமனை விவரங்கள், மூத்த குடிமக்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மேலும் மூத்த குடிமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்திடும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்படி மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் தங்கள் திறன் பேசியில் (Play Store) வழியாகவோ அல்லது மூத்த குடிமக்களுக்கான Seniorcitizen.tnsocial welfare.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More; BREAKING| சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!