#திருவள்ளூர் : செல்போன் தர மறுத்ததால் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்..!

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் மோனிஷ்(17), திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.


சென்ற வியாழக்கிழமை அன்று, கல்லூரியில் வகுப்பறையின் உள்ளே செல்போன் பயன்படுத்தியதற்காக கல்லூரி நிர்வாகம் செல்போனை பறிமுதல் செய்தது.

இந்த நிலையில், இன்று கல்லூரிக்கு சென்ற அவர் செல்போனை திரும்ப கேட்டு கல்லூரி நிர்வாகத்திடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும், செல்போன் தர மறுத்து விட்டார்கள். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு , கல்லூரியின் சுவர் ஏறி குதித்து ஆவடி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கே திருப்பதியிலிருந்து சென்னை செல்ல கூடிய சப்தகிரி ரயில் வந்தபோது அதில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் அந்த வாலிபர் . இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

#புதுக்கோட்டை : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் மின்னல் தாக்கி பரிதாப பலி..!

Tue Nov 15 , 2022
புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள திருப்புனவாசலில் உணவகம் நடத்தி வருகிறார் பழனிசாமி. இவருக்கு மகன் சஞ்சய் (17) மற்றும் மகள் சஞ்சனா(15) உள்ளனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். நேற்று வழக்கம் போல் அண்ணன், தங்கை இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் நிலையில், அவர்களின் சித்தப்பா இருவரையும் இருசக்கர வாகனத்தில் உக்கார வைத்து […]
longest light

You May Like