தன்னுடன் வேலை பார்க்கும் சக பெண் காவலரை… ஏமாற்றிய சப் இன்ஸ்பெக்டர் கைது..!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இருக்கும் அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் சரவணன்(50). இவருக்கு கல்யாணமாகி இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் அதே காவல் நிலையத்தில் விவாகரத்தாகி தனியாக வசித்து வரும் பெண் காவலர் ஒருவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை பேசி ஏமாற்றி இருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக பெண் காவலர் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் அப்பர் குன்னூர் காவல் நிலைய காவல்துறையினர், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை கைது செய்தனர். இவரிடம் விசாரணை செய்த காவல்துறையினர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Baskar

Next Post

நீட் தேர்வு – வடஇந்திய மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி ! ...ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்து சாதனை …

Thu Sep 8 , 2022
ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வில் வட இந்திய மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ். படிப்புக்கான நீட்  நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17ல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 3,500 மையங்களில் இத்தேர்வு நடந்தது. இந்நிலையில் தேசிய தேர்வு முகமை இதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9,93,069 மாணவ , மாணவிகள் […]

You May Like