பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மகளை பிரசவத்திற்காக அழைத்து வந்த தாய் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் அயன் தத்தனூர் காலனி தெருவை சார்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அசலாம்பாள் வயது 53. இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்களது இரண்டாவது மகள் லலிதாவை பெரம்பலூர் மாவட்டம் ஈழப்புலியூரைச் சார்ந்த சிலம்பரசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு முதலாவதாக பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான லலிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.
அவருக்கு பிரசவ வலி ஏற்படவே பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்துள்ளனர். மகளுக்கு துணையாக அசலாம்பாள் மருத்துவமனையில் உடனிருந்து அவரை கவனித்து வந்திருக்கிறார். லலிதாவிற்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. திடீரென கடந்த இரண்டு நாட்களாக அசலாம்பாள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவே நடந்திருக்கிறார். தனக்குத் தானே பேசிக் கொள்வது சிரிப்பது என இவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் தனது மாமனார் ராமசாமி இடம் அசலாம்பாலை அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார் சிலம்பரசன். இந்நிலையில் நேற்று காலை 11:45 மணிக்கு மகப்பேறு வார்டு அருகே உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் இருக்கும் கழிவறையை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது ஒரு கழிவறை நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் மூடியே இருந்தது இதனால் சந்தேகமடைந்த பணியாளர்கள் அந்தக் கழிவறையின் கதவை உடைத்து பார்த்த போது அசலாம்பாள் கழிவறையில் தனது சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. துணிகளை தொங்க விட பயன்படும் கம்பியில் தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பெரிது பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மனநல பாதிப்பினால் அசலாம்பாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் ஆகிவிட்டதே என்ற சோகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.